அனுமந்த வாகனத்தில் திருப்பதி ஏழுமலையான் பவனி...


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீராம நவமி விழா கண்ணுக்கு விருந்தாக நடைபெற்றது. ஆலய உற்சவ மூர்த்தியான ஸ்ரீராமர் தமக்கு பிரியமான அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி திருமாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நான்கு மாட வீடுகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா என கோஷமிட்டு கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமியை வழிபட்டனர்.

அதன்பின் இரவு 9 மணி முதல் 10 மணிக்குள் ஆலயத்தின் பங்காரு வாகிலி அருகே ஸ்ரீராமநவமி ஆஸ்தான விழா வைபவமாக நடைபெற்றது.



Leave a Comment