சூரிய பிரபையில் எழுந்தருளிய காமாட்சியம்மன்... தத்ரூபமாக வரைந்து அசத்திய ஓவியர்...


கோவில் நகரமாக காஞ்சிபுரம் மாநகரில் அமைந்துள்ள உலக பிரசித்திப்பெற்ற காஞ்சி ஸ்ரீ  காமாட்சியம்மன் கோவிலில் மாசி மாத  பிரம்மோற்ச்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.அதையொட்டி இன்று  நான்காம் நாளில் சூரிய பிரபையில் லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளிய காமாட்சியம்மனை சாமி தரிசனம் செய்ய காஞ்சிபுரத்தை சேர்ந்த  ஓவியரான ஆனந்தகுமார் சங்கரமடம் வந்துள்ளார்.

அப்போது சங்கர மடம் அருகிலுள்ள மண்டபத்தில் காமாட்சியம்பாள் எழுந்தருளி அங்கு நடைபெற்ற மண்டகப்படியின் போது,சாமி தரிசனம் செய்த ஓவியர் ஆனந்தகுமார் தான் நேரில் கண்டதை அப்படியே ஓவியமாக வரைய எண்ணி உடனே தன் கண் முன்னே நடந்த  நிகழ்வுகளை தனது ஓவியத் திறமை மூலமாக அதனை ஓவியமாக வரையத்துவங்கினார்.

அதன் வெளிப்பாடாக மண்டபத்தில் காமாட்சியம்பாள் எழுந்தருளி அங்கு நடைபெற்ற மண்டகப்படியின் போது,பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது போன்றும் மண்டபத்தையும் மிகவும் தத்ரூபமாக தனது ஓவியத் திறமையினால் அவர் வரைந்து அசத்தினார். மேலும் அவ்வாறு ஓவியர் ஆனந்தக்குமார் ஓவியம்  வரைந்து கொண்டிருந்ததை ஆச்சரியத்துடன் பார்த்து சில இளைஞர்களை அதனை தங்களது செல்போன்களில்  வீடியோவாகவும் எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Leave a Comment