வாஞ்சிநாதர் கோவிலில் கடைதீர்த்தவாரி...


ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில்  கடைதீர்த்தவாரியை முன்னிட்டு 1000 க்கும் மேற்பட்டோர் நீராடி சாமி தரிசனம்

உலகத்தில் எம பயம் இல்லாதவர்கள் யாரும் இல்லை அந்த எம பயத்தையும் பைரவ உபாதையும் போக்கும் வகையில் இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் ஸ்ரீ எமதர்மராஜா சித்திரகுப்தர் தனி சன்னதியில் இருந்து அருள் பாலிக்கும் திருக்கோவிலும் மகாலட்சுமியை அடைய விரும்பி திருமால் தவம் செய்ததால் இத்தலம் ஸ்ரீவாஞ்சியம் என பெயர் பெற்றது. இவ்வாறு உலகம் போற்றும் சிறப்பு தளமாக விளங்குகிறது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம்  வாஞ்சிநாதர் சமேத மங்களாம்பிகை திருக்கோவிலில் கார்த்திகை மாத கடை ஞாயிறு தீர்த்தவாரியை முன்னிட்டு வள்ளி தேவசேனா முருகப்பெருமான் விநாயகர் சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு வசந்த மண்டபத்தில் தீபாரணை நடைபெற்ற பின்னர் ஆலயத்தின் வெளியே நான்கு வீதிகளில் நடன வாகனத்தில் எழுந்துருள் செய்யப்பட்டு ஆலயத்தில் உள்ள குப்த கங்கையில் அசுர தேவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று கார்த்திகை மாத கடை ஞாயிறு தினத்தை முன்னிட்டு வாஞ்சிநாதர்  மங்காளம்பிகை சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து . 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் குப்தகங்கையில் நீராடி எமதர்ம ராஜா மற்றும் வாஞ்சிநாதர் சாமியை தரிசித்து செல்கின்றனர்.

குறிப்பாக ஐயப்ப பக்தர்கள் மற்றும் வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து அதிகாலை முதல் குளத்தில் நீராடி அதன் பின்னர் சுவாமியை  நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர் இதற்காக திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



Leave a Comment