ஆபத்துகள் அகல அற்புத மந்திரம்..... 


ஆபதாம் அபஹர்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம் !  

 லோகாபி ஸ்ரீ ராமம் பூ "யோ பூ " யோ நமாம் யஹம் !! 

ஆபத்தை அகற்றி ஸம்பத்தைத் தருபவரும் உலகில் அழகுள்ளவருமான ராமனைப்  பலமுறை நமஸ் கரிக்கிறேன் .  நித்யமே 10 முறையும் ஆபத்து வந்தபோது 1008 முறையும் ஜபித்தால் பெரிய ஆபத்து  அகலும்.

மாதர் மே மதுகைடபக்னி மஹிஷ ப்ராணாபஹா  ரோத்யமே ஹேலாநிர்மித  தூம்ர லோசன  வதே  ஹே  சண்ட முண்டார்த்திநி  l.  
நி: சேஷீ க்ருத  ரக்தபீஜ  தனுஜே நித்யே நிசும் பாபஹே சும்பத்வம்ஸினி   ஸம்ஹராசு  துரிதம்  துர்க்கே  நமஸ்தே  அம்பிகே  !!
தாயே !  

மதுகைடபர்களை வதம் செய்தவளே !  
மஹிஷாசுரனுடைய பிராணனைப் போக்கியவளே ! 
விளையாட்டாக தூம்ரலோசனை  வதைத்தவளே !       
சண்ட முண்டர்களை அழித்தவளே  ! 
ரக்தபீஜாசுரனை  நிர்மூலம்  ஆக்கியவளே !  
சும்பனையும் நிசும்பனையும் ஒழித்தவளே !  
நித்தியமானவளே ! 
துர்க்காம்பிகையே ! 
உன்னை நமஸ்கரிக்கின்றேன் !  
எனது  பாபங்களை  போக்கி  அருள்வாயாக !    
 



Leave a Comment