எதிரி பயம் நீங்கி, துன்பம் அகல....


ஆர்த்தாநாம்  ஆர்தி ஹந்தாரம் பீதாதாம் பீதி நாஸநம் !  
த்விஷதாம்  காலதண்டம் தம்  ராம சந்த்ரம் நமாம் யஹம் !!    

துக்கப்படுபவர் துக்கத்தையும்  பயந்தவர் பயத்தையும் அகற்றி  சத்ருவுக்கு யம தண்டமாயிருக்கிற ஸ்ரீராமனை நமஸ்கரிக்கிறேன் . 1008  முறை ஜபித்தால்   சத்ரு பயம்  துன்பம் அகலும்.

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே   ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே  !!  

ஸ்ரீ ராம ராம  என ராம நாமத்தை  ஜபித்தாலே  விஷ்ணு ஸஹஸ்ரநாம. ஜபம்செய்ததற்கு ஒப்பாகும் என பரமேஸ்வரரே  சொல்லியுள்ளார்.
 

நியாயமான முறையில் வரும்  எதிர்பாராத பண வரவுகளை  கீழ்கண்ட  மஹாலட்சுமி மந்திரம்  உண்டாக்கி கொடுக்கும் சக்தி படைத்தது .!   

விலேக நிடிலே விதிர்மம் விபிம் விஸ்ருஜ்யாந்திரம்       
  த்வயா விலிகிதன்யமே தநிதி தத்பல ப்ராப்தயே 
  ததந்திர தலே ஸ்புடம்  கமல வாஸினி ஸ்ரீ:

 இமாம்   ஸமர்பய  ஸமுத்ரிகாம் ஸகல  பாக்ய ஸம்ஸீகரம் !!           

ஹே.....மஹாலட்சுமியே !   பிரம்மதேவன்    என்னுடைய தலை எழுதும்போது  பிற்காலத்தில்   நீ       அதை  மாற்றி எழுத வேண்டும் என்பதற்காக    தான்  எழுதும்போது கொஞ்சம்  இடம் விட்டு விட்டு  எழுதி  உள்ளார்   எனவே  முத்திரை தாங்கிய உன்னுடைய   திருக்கரத்தால்  அந்த இடத்தில்  எழுதி   என் வாழ்க்கையை  செழிப்பாகவும்  செல்வ சிறப்பாக   அமையவும்  ஆசிகள்  வழங்க வேண்டுகிறேன்.   
 



Leave a Comment