மணிகண்டேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா....


மணிகண்டேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா....
அரக்கோணம் அருகே மாசிமாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மணிகண்டேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேர்  இழுத்தனர்.

அரக்கோணம் அடுத்த திருமால்பூர் பகுதியில்  2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ  அஞ்சனாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ மணிகண்டேஸ்வரர் ஆலயத்தில் மாசி மாதத்தை முன்னிட்டு கடந்த 16ஆம் தேதி முதல் பல்வேறு கட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து அஞ்சனாட்சி இத்துடன் உரையை மணிகண்டீஸ்வரர்க்கு  பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டது.  அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார் மேலும் எந்தவிதமான நோய் நொடி இன்றி மக்கள் வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வளம் பிடித்து இழுத்தனர் இன்று முழுவதும் தேரானது முக்கிய வீதிகளில் வலம் வந்து மாலை மணிகண்டீஸ்வரர் ஆலயம் வந்தடைந்தது.



Leave a Comment