மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.... 


சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசன் மற்றும் திருவிழா நாட்கள் தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் கோவில் நடை திறக்கப்படும். அதன்படி, மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். 

இன்று முதல், சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. 
 
மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அதைத்தொடர்ந்து படி பூஜை நடைபெறும். இரவு 8.50 மணிக்கு நடை அடைக்கப்படும், இந்த பூஜை 17-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும்.

கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனாவை கருத்தில் கொண்டு, ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். 



Leave a Comment