ரங்கநாதர் கோயிலில் பலிபீட திருமஞ்சன பூஜை


உலக நன்மை, மழை வேண்டி ஸ்ரீரங்கம் கோயிலில் பலிபீட திருமஞ்சன பூஜை நடந்தது. உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தங்க கொடி மரம் அருகே பலிபீட திருமஞ்சன பூஜை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் 2012ல் நடந்தது. அந்த பூஜை நடந்து முடிந்த பின் அப்போது மழை பெய்தது. அதேபோல் இந்தாண்டும் இந்த பலிபீட திருமஞ்சன பூஜை நேற்று காலை நடந்தது. முன்னதாக காவிரியாற்றிலிருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டு தங்க கொடி மரத்திற்கும், பலி பீடத்திற்கும் பால், தயிர், இளநீர் மற்றும் பன்னீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் பலிபீடம் மற்றும் ெகாடிமரத்திற்கு புதிய வஸ்திரம் மற்றும் மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது. இந்த பலிபீட பூஜையில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மண்டல இணை ஆணையர் கல்யாணி, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன் பட்டர்கள் உள்பட கோயில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Leave a Comment