திருப்பதி முதல் திருமலை வரை மின்சார பேருந்துகள்.....


சுற்றுச்சூழலை பாதிக்காத மின்சார பேருந்துகளும் இயக்குவதற்கு தேவஸ்தானம் ஊக்குவிப்பு அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி

திருப்பதி திருமலை இடையே சுற்றுச்சூழலை பாதிக்காத மின்சார பேருந்துகளை கடந்த இரண்டு தினங்களாக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டிக்கு விளக்கம் அளித்தனர். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுப்பா ரெட்டி சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தேவஸ்தானம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு டீசல் மூலம் இயக்கப்பட்டு வரும் வாகனங்களைக் காட்டிலும் மின்சார வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தற்போது உள்ள டீசல் பேருந்துகளை மின்சார பேருந்துகளாக  பெங்களூருவில் உள்ள வீரா வாகனா உத்யோக பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம்  மாற்றப்பட்டுள்ளது.

மின்சார பேருந்துகளாக மாற்றப்பட்ட பேருந்தில் திருப்பதி - திருமலை இடையே மலைப்பாதையில்  கடந்த இரண்டு நாட்களாக ஒரு நாளைக்கு மூன்று முறை சோதனை முறையில் இயக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார பேருந்திற்கு ஒருமுறை சார்ஜிங் செய்தால் சுமார் 170 கி.மீ பயணம் செய்யலாம் என அவர் தெரிவித்தார். 

இதையடுத்து திருமலையில் உள்ள அறங்காவலர் குழுத்தலைவர் முகாம் அலுவலகத்தில் இருந்து அன்னமய்ய பவன் வரை மின்சார பேருந்தில் பயணித்து பேருந்து ஆய்வு செய்தார். இதில் போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர் செங்கல் ரெட்டி, போக்குவரத்து துறை அதிகாரிகள் நரசிம்ஹுலு,  சீனிவாஸ், சந்திர சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Leave a Comment