ராகு கேது பெயர்ச்சி எளிய பரிகாரங்கள்.... ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக....


மேஷம்....

கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
‘ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ’
‘சிவபெருமான்’ மற்றும் ‘பைரவரை’ வழிபடவும்
நீலம் மற்றும் கருப்பு நிற ஆடைகளை தானம் செய்யவும்
வெள்ளி சங்கிலி அணியவும்
வீட்டின் அருகிலுள்ள கருப்பு நாய்களுக்கு உணவளிக்கவும்
முடியும் என்றால், சனிக்கிழமைகளில் உபவாசம் (உண்ணா நோம்பு) இருக்கவும்

ரிஷபம்....

கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
‘ஓம் ஸ்ட்ரம் ஸ்ட்ரிம் ஸ்ட்ரௌம் சஹ கேதுவே நமஹ’
செவ்வாய்க்கிழமைகள் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடவும்
ஏழைகளுக்கு சமையல் எண்ணெய் தானமாக அளிக்கவும் 
உங்கள் கழுத்து அல்லது மணிக்கட்டில் நீல நிற நூலில் சந்தனத் துண்டு ஒன்றை கட்டி அணிந்து கொள்ளவும்
மிச்சமாகிப் போன அல்லது கெட்டுப் போன பழைய ஆகாரங்களை உட்கொள்ளாமல் தவிர்த்து விடவும் 
முடியும் என்றால், செவ்வாய்க்கிழமைகளில் உபவாசம் (உண்ணா நோம்பு) இருக்கவும்

மிதுனம்....

கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
‘ஓம் நமசிவாய’
அன்னை துர்கையை வணங்கி வழிபடவும் 
சாம்பல் வண்ண ஆடைகளை ஏழைகளுக்கு தானம் அளிக்கவும் 
உங்களுக்கு விருப்பம் இருந்தால் கருப்பு நிற நாயை வளர்க்கவும் 
நீங்கள் குளிக்கும் பொழுது, தண்ணீரில் சில துளி சந்தன எண்ணெய் அல்லது சந்தனத் திரவியம் விட்டு குளிக்கவும்.
வீட்டில் வளர்க்கும் மீன்கள், அல்லது குளம் ஆறு போன்ற இடங்களில் உள்ள மீங்களுக்கு உணவளிக்கவும்

கடகம்....


கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
‘ஓம் ரும் ராஹவே நமஹ’
விநாயகருக்கு பூஜை செய்து வழிபடவும் 
தாகத்தில் தவிப்பவர்களுக்குத் தண்ணீர் அளிக்கவும் 
இளநீர் குடிக்கவும், அல்லது எந்த வகையிலாவது தேங்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்  
ஐந்து வகை தானியங்களை, எவ்வளவு முடியுமோ அவ்வளவு, பறவைகளுக்கு அளிக்கவும்
மது மற்றும் போதை பொருட்களை உட்கொள்ளாமல் தவிர்க்கவும் 

சிம்மம்....

கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
‘அர்த்தகாயம் மகாவீர்யம் சந்திராதித்ய விமர்தனம்
சிம்ஹிகா கர்பசம்பூதம் தம் ராகும் பிரணமாம்யஹம்
கீழ்க்கண்ட மந்திரத்தையும் தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
‘பலாச புஷ்ப சங்காசம் தாரா கிரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் தம் கேதும் பிரணமாம்யஹம்
 ஏழைகள் மற்றும் வீடற்றவர்களுக்கு ஒரே நிறமுடைய போர்வை கொடுத்து உதவவும் 
ராகு காலத்தில் தியானம் மேற்கொள்ளவும்
செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் அதிக உப்பு சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்கவும்

கன்னி....


கீழ்க்கண்ட ராகு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
‘ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹீ
தன்னோ ராகு ப்ரசோதயாத்’
கீழ்க்கண்ட கேது காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
’ஓம் அஷ்வத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹீ
தன்னோ கேது ப்ரசோதயாத்’
அனாதைக் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கவும்
குதிரைக்குக் கொள்ளு தரவும்  
மீன் தொட்டிகளிலோ, கடைகளிலோ இருக்கும் மீன்களை விடுவித்து, அவற்றைத் தண்ணீரில் விடவும்; மேலும், மீன்களுக்கு உணவும் அளிக்கவும் 

துலாம்....


கீழ்க்கண்ட கணபதி காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
‘ஓம் ஏகதந்தாய வித்மஹே, வக்ரதுண்டாய தீமஹீ, தன்னோ தந்தி ப்ரசோதயாத்‘
கீழ்க்கண்ட கணபதி மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபம் செய்யவும்
‘ஓம் கம் கணபதயே நமஹ’
சர்க்கரை, நெய், வெல்லத்தால் செய்யப்பட்ட இனிப்புகள் அல்லது நிலக்கடலை போன்ற நிலத்தடியில் வளரும் பொருட்களை தானம் செய்யவும் 
செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் ஆன்மீகத் தலங்கள், தொண்டு  நிறுவனங்கள் அல்லது மக்களுக்கு, ஏழு வகை தானியங்களை தானம் செய்யவும்
கல்வியில் சிறந்து விளங்க, மற்ற மாணவர்களுடன் சேர்ந்து குழுவாகப் படிப்பதைத் தவிர்க்கவும்
குறுக்கு வழியில் சென்றால் வெற்றி கிட்டும் என்ற நினைப்பைத் தவிர்க்கவும்

விருச்சிகம்....


கீழ்க்கண்ட துர்கா காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
‘ஓம் காத்யாயநாய வித்மஹே கன்ய குமாரி தீமஹீ 
தன்னோ துர்கி ப்ரசோதயாத்’
கீழ்க்கண்ட ராகு மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
‘ஓம் ரும் ராஹவே நமஹ’
கீழ்க்கண்ட கேது மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும் 
‘ஓம் கெம் கேதவே நமஹ’
அன்னை துர்கா தேவியை வழிபடவும்  
நெற்றியில் சந்தனம் பூசிக் கொள்ளவும்  
சனிக்கிழமைகளில் சிவப்பு துவரையை ஏழைகளுக்கு தானம் செய்யவும்
சிந்தூரத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளவும்; அல்லது, குங்குமப்பூ அல்லது சிந்தூரத்தை உணவில் சேர்த்துக் கொள்ளவும்

தனுசு....


கீழ்க்கண்ட ராகு சாந்தி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
‘ஓம் ராஹுவே தேவயே சாந்திம், ராஹுவே கிருபாயே கரோதி
ராகுவே சமாயே அபிலாஷத் ஓம் ராஹுவே நமோ நமஹ’
கீழ்க்கண்ட கேது சாந்தி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
‘ஓம் கேதும் கர்னவான் கேதவே பேஷோமயம் அபேஷசே, சமுஷ்த்விராஜயதஹ’
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரங்களை தொடர்ந்து 21 நாட்கள் பாராயணம் செய்வது மிகச் சிறந்த பலன்களைத் தரும் 
உங்கள் ஆடை மற்றும் அணிகலன்களில் சிவப்பு நிறத்தைத் தவிர்க்கவும்

மகரம்....

கீழ்க்கண்ட நரசிம்ம காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
‘ஓம் வஜ்ரநகாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹே
தன்னோ நரசிம்ம ப்ரசோதயாத்’
 கீழ்க்கண்ட நரசிம்ம மகா மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
‘உக்ரம் வீரம் மகா விஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோ முகம்
ந்ருஸிம்மம் பீஷணம் பத்ரம் மிருத்யுர் மிருத்யும் நமாம்யஹம்’
தேங்காய், கடுகு எண்ணெய் மற்றும் போர்வைகளை தானம் செய்யவும்
மேலும், கோயில்களிலும், ஆன்மீகத் தலங்களிலும் கருப்பு எள் தானம் செய்யவும் 
கேதுவின் பாதக விளைவுகளைத் தவிர்க்க, மற்றவர்களை எளிதில் நம்பி எதையும் செய்யாமல் இருக்கவும் 
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொள்ளவும். ஆன்மீக நடவடிக்கைகளில் அதிக நேரம் செலவிடவும்  

கும்பம்....


ராகுவிற்கான கீழ்க்கண்ட வேத மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
‘ஓம் க்யான்ஷ்சித்ர ஆபுவ்த்வதி சதா வ்ருத் சகா
க்யா ஸ்சின்ஷ்த்யா வ்ரித ஓம் ராகவே நமஹ’
கேதுவிற்கான கீழ்க்கண்ட வேத மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
‘ஓம் கேதும் க்ரின்வன் கேதவே பேஷோ மர்யா அபேஷ்ஸே
சமுஷ்ட்பிர்ஜா யதா ஓம் கேதவே நமஹ’
சிவாலயங்களுக்குப் பழம் மற்றும் பால் வழங்கி, வழிபடவும்  
அமாவாசை நாட்களில் ஆலயங்களுக்கு 4 தேங்காய்களை அளிக்கவும் 
வீதியில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவு அளித்துப் பராமரிக்கவும் 
சூரிய அஸ்தமனம் ஆகி ஒரு மணி நேரத்திற்குள் இரவு உணவை முடித்துக் கொள்வது நல்லது

மீனம்....


கீழ்க்கண்ட ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும் 
‘ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே வாயுபுத்ராய தீமஹீ  தன்னோ ஹனுமத் ப்ரசோதயாத்’
கீழ்க்கண்ட ‘மனோஜவம் மாருத துல்யவேகம்’ மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும் 
‘மனோஜவம் மாருத துல்யவேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதத்மஜம் வானரயுத முக்யம் ஸ்ரீ ராம தூதம் சரணம் ப்ரபத்யே’  
ஆலயம் சென்று வினாயகர், நரசிம்மர், சிவன் மற்றும் துர்கையை வழிபடவும்
நெற்றியில் சிந்தூரம் இட்டுக் கொள்ளவும்  
உங்கள் குரு, மத குருமார்கள், ஆலய அர்ச்சகர்கள் மற்றும் அந்தணர்களின் ஆசிகளைப் பெறவும் 
ஏழை மக்களுக்கு நீலம், கருப்பு அல்லது ஆழ்ந்த நிற ஆடைகளை தானம் செய்யவும் 
உங்கள் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களுக்கும்,  அலுவலகத்தில் மேலதிகாரிகளுக்கும் உரிய மரியாதை அளிக்கவும் 



Leave a Comment