கருடனை எந்த கிழமைகளில் தரிசித்தால் என்ன பலன்..... 


ஞாயிறு கருட தரிசனம் - நோய் அகலும்

நோய் அகலும், மனக்குழப்பம் நீங்கும். பாவங்கள் நீங்கும்.

திங்கள் கருட தரிசனம் - குடும்ப நலம் பெருகும்.

செவ்வாய் கருட தரிசனம் - தைரியம் கூடும்.

புதன் கருட தரிசனம் - எதிரிகள் இல்லா நிலை உருவாகும்.

வெள்ளி கருட தரிசனம் - பணவரவு கிட்டும்

சனி கருட தரிசனம் - நற்கதி அடையலாம்.

கருடாழ்வாரை தரிசிக்கும்போது கூறி வணங்க வேண்டிய மந்திரம்


குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச ! 
விஷ்ணு வாஹ ! 
நமஸ்துப்யம் பக்ஷி ராஜாயதே நம:

என கூறி வணங்க வேண்டும். பெரிய திருவடி என வைஷ்ணவர்களால் போற்றப்படும் கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் ஸ்வாதி நக்ஷத்திரத்தன்றுதான். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும். மாங்கல்யம் பலம் பெறும்.
 



Leave a Comment