பொறையுடைமை - பொறுத்தலை விட நல்லது.எது? (தினம் ஒரு திருக்குறள்)


குறள் : 
பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
மறத்த லதனினும் நன்று 
மு.வ விளக்க உரை: 
வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.
சாலமன் பாப்பையா விளக்க உரை: 
தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது. 
கலைஞர் விளக்க உரை:
அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்



Leave a Comment