பிறனில் விழையாமை - அறத்துடன் குடும்பம் நடத்துபவன் (தினம் ஒரு திருக்குறள்)


குறள் : 
அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான் 
பெண்மை நயவா தவன் 
மு.வ விளக்க உரை: 
அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே 
சாலமன் பாப்பையா விளக்க உரை: 
அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான் 
கலைஞர் விளக்க உரை: 
பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்



Leave a Comment