பிறனில் விழையாமை - என்றும் அழியாத பழிக்கு ஆளாவான் யார்? (தினம் ஒரு திருக்குறள்)


குறள் : 
எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும் 
விளியாது நிற்கும் பழி 
மு.வ விளக்க உரை: 
இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான் 
சாலமன் பாப்பையா விளக்க உரை: 
அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான். 
கலைஞர் விளக்க உரை: 
எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்



Leave a Comment