பிறனில் விழையாமை - தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் (தினம் ஒரு திருக்குறள்)


குறள் :
எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல் 
மு.வ விளக்க உரை: 
தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்? 
சாலமன் பாப்பையா விளக்க உரை:
மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன? 
கலைஞர் விளக்க உரை: 
பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்



Leave a Comment