அடக்கம் உடைமை - யாகாவா ராயினும் நாகாக்க (தினம் ஒரு திருக்குறள்)


குறள்: 
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற் 
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு 
மு.வ உரை: 
காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.
சாலமன் பாப்பையா உரை: 
எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர். 
கலைஞர் உரை: 
ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும் இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்



Leave a Comment