இனியவை நாற்பது - மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் (தினம் ஒரு திருக்குறள்)


குறள் : 
இனிய உளவாக இன்னாத கூறல் 
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

மு.வ விளக்க உரை: 
இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும்போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது . 

சாலமன் பாப்பையா விளக்க உரை: 
மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும். 

கலைஞர் விளக்க உரை: 
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்



Leave a Comment