இனியவை நாற்பது - சிறுமைத்தனமற்ற இனியசொல் (தினம் ஒரு திருக்குறள்)


குறள் : 
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் 
இம்மையும் இன்பம் தரும் 

மு.வ விளக்க உரை: 
பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை: 
பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும். 

கலைஞர் விளக்க உரை: 
சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.



Leave a Comment