திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்ப உற்சவம் நாளை தொடக்கம்


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5 நாள் தெப்ப உற்சவம் நாளை தொடங்குகிறது. வரும் 9ம் தேதி வரை 5 நாட்களுக்கு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. முதல் நாளான நாளை அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் சீதா, லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகள் ராமருடன் 3 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். 

2-வது நாளான நாளைமறுதினம் ருக்மணி சமேத கிருஷ்ணர் சுவாமி 3 சுற்றுகளும், கடைசி 3 நாட்களான 7, 8 மற்றும் 9ம் தேதிகளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி 7 சுற்றுக்கள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை இந்த உற்சவம் நடக்கும்.

இந்த உற்சவத்தையொட்டி நாளையும் நாளைமறுதினமும் வசந்த உற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவையும் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
 



Leave a Comment