திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தேரோட்டம்...


தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மதுரை திருப்பரங்குன்றம் தேரோட்டம் - பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடிக்க நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்த தனர்.

அறுபடைவீடுகளில் முதற் படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 26ந் தேதியுடன் கொடியேற்றத்துடன் துவங்கியது.

அதனை முன்னிட்டு காலை மாலை வேளையில் ஸ்ரீ முருக பெருமான் ஸ்ரீ தெய்வானையுடன் நான்கு ரத வீதிகளிலும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார்கள்.

இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு சுவாமி முருகன், தெய்வானையுடன் தெப்பத்தில் முட்டு தள்ளு வைபவம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து அலங்கரிக்கபட்ட திருத்தேரில் சுவாமி முருகபெருமான், தெய்வானையுடன் வைக்கப்பட்டு 16 கால் மண்டபத்தில் இருந்து துவங்கி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

இவ்வைபவத்தில் ஆண்கள் பெண்கள் என திரளாக வந்து அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்து பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசம் வருகிற 8 ந் தேதி நடைபெற உள்ளதையொட்டி கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யபட்டு வருகிறது.



Leave a Comment