பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. வருகிற 11-ம் தேதி 10-ம் திருநாளான மிகவும் பிரசித்திப்பெற்ற தெப்பத்தேர் நிகழ்ச்சி நடைபெற்று தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 7 மணிக்கு விநாயகர் பூஜை,மயூரையாகம் நடைபெற்றது. பின்னர் கொடிப்படம் நான்கு ரதவீதிகளில் வலம் வருதல் நிகழ்ச்சியும், கோவில் மண்டபத்தில் முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.

அதன்பிறகு சப்பரத்தில் கொடிப்படத்துடன் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் கொடிகட்டு மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்;தொடா;ந்து அங்கு விநாயகர் பூஜை, கொடிபூஜை, உள்ளிட்ட பு+ஜை இடம்பெற்றது. பின்னர் கொடிப்படத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு கொடியேற்றம் தொடங்கியது. அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தா;கள்  ‘முருகனுக்கு அரோகரா’, ‘கந்தனுக்கு அரோகரா’ என சரண கோஷம் எழுப்பினர். பின்னர் கொடிமரத்துக்கு விசேஷ பூஜை நடந்தது.


10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் நாள்தோறும் காலையில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தந்த பல்லக்கில் புறப்பாடும், இரவு 8.30 மணிக்கு மேல் புதுச்சேரி சப்பரம், வௌ;ளி ஆட்டுக்கிடா, வௌ;ளி காமதேனு, வௌ;ளியானை, பெரியதங்கமயில் மற்றும் தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் புறப்பாடும் நடைபெற இருக்கிறது. விழாவின் 10-ம் திருநாளான 11-ம் ;தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.
 



Leave a Comment