தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு பெருவிழா மகாயாகசாலையுடன் துவங்கியது 


உலக புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு வருகின்ற 5 ந்தேதி குடமுழுக்கு நடத்தப்பட இருக்கின்றது.  அதற்கான பணிகளை தொல்லியல் துறையினரும்  இந்து சமய அறநிலையைத்துறையினரும் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

குடமுழுக்கிற்காக கோவில் அருகே 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மகா யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 110 யாககுண்டங்களில் 300 சிவாச்சாரியார்கள் அமர்ந்து யாகம் செய்யக்கூடிய வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. 

இன்று காலை பூர்வாங்க பூஜையுடன் சிவனடியார்களும் , தமிழ் ஓதுவார்களும் கலந்து கொண்டு மகா யாக சாலையில் யாகங்களை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 8 கால பூஜைகள் மற்றும் சிறப்பு ஆராதனைகள்  வருகின்ற 5 ந்தேதி வரை யாக சாலை நடைபெறும். 



Leave a Comment