ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு.... கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் பரவசம்....


வைகுண்ட ஏகாதசியை ஒட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 

பூலோக வைகுண்டம், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட இன்று வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் அதிகாலை திறக்கப்பட்டது.

இதனையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் புறப்பட்டார். அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது. பரமபதவாசல் வழியாக எழுந்தருளும் நம்பெருமாள் திருக்கொட்டகையில் பிரவேசமாகினார்.


நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து சென்றால் பிறவி பலனை அதாவது மோட்சத்தை அடையலாம் என்பது ஐதீகம் என்பதால் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மட்டும் இன்றி பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளனர். சொர்க்கவாசல் திறக்கப்பட்டபோது கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.



Leave a Comment