திருப்பதியில் அனைத்து பக்தர்களுக்கு இலவச லட்டு...


ஜனவரி 20 ஆம் தேதி முதல் சலுகை விலையில் வழங்கப்பட்டு வந்த லட்டுகள் ரத்து செய்து அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்து இருக்கிறது. 

இதுவரை அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் பாத யாத்திரையாக திருமலைக்கு நடந்து வரக்கூடிய பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய கூடிய அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே இலவச தரிசனத்தில், சர்வ தரிசனத்தில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள்,  ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர்கள் செல்லும் தரிசனத்தில்  சலுகை விலையில் 4 லட்டுகள் 70 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்தது. 

இனி சலுகை விலையில் வழங்கப்பட்டு வந்த லட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு ஒரு லட்டு மட்டும் இலவசமாக வழங்கி பக்தர்கள் தேவைக்கேற்ப ஒரு லட்டு ரூபாய் 50 க்கு கோவிலுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள லட்டு கவுன்டரில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Leave a Comment