அரிதான வளைவு சூரிய கிரகணம்.... 


நாளை நிகழப்போகும் சூரிய கிரகணம் மிகவும் அரிதான ஒன்று. இது போன்ற வளைவு சூரிய கிரகணம் மீண்டும் 2031ம் ஆண்டு மே 16ம் தேதிதான் நிகழும். 

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் உண்டாக காரணம். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும். நாளைய சூரிய கிரகணம் வளைவு சூரிய கிரகணம். அதாவது சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைக்கும். அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றும்.

இந்த வளைய சூரிய கிரகணத்தை நேரடியாக பார்க்கக் கூடாது. நேரடியாக பார்த்ததால் அது கண்களின் விழித்திரையை பாதிக்கும் அபாயம் உள்ளது. மேலும் சந்திரன் சூரியனை கடந்து செல்லும் இறுதி நிமிடங்கள் மிகவும் கடுமையாக காட்சி அளிக்கும். அப்போது சூரிய ஒளியை கட்டுப்படுத்தும் கண்ணாடியுடன் சிவப்பு நிறத்தை ஓரளவு காண முடியும். 

தமிழ்நாட்டில் ஊட்டி, கோயம்பத்தூர், ஈரோடு, பாலக்காடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் சென்னை உட்பட ஓரளவு இந்த சூரிய கிரகணத்தை முழுமையாக காணலாம்.

கிரகணம் காலை 08:08 மணி அளவில் துவங்கி, 11:19 மணிக்கு முடிந்துவிடும். சரியாக 09:35 மணி அளவில் சூரியனை சந்திரன் முழுமையாக மறைக்கும். இந்த முழு கிரகண வடிவம் சுமார் 3 நிமிடங்களுக்கு நிலைபெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Leave a Comment