அகல் விளக்கும் நவகிரஹ தத்துவமும்


கார்த்திகை தீபத்திருநாளில் வீடு முழுவதும் அகல் விளக்கு ஏற்றி அலங்கரிப்போம். அகல் விளக்கு ஏற்றி வழிபடும் நமக்கு அதில் உள்ள நவகிரஹா தத்துவம் குறித்து தெரியுமா? 
இதோ தெரிந்து கொள்ளுங்கள்.... 

அகல் விளக்கு = சூரியன்

நெய்/எண்ணெய்-திரவம் = சந்திரன்

திரி = புதன்

அதில் எரியும் ஜ்வாலை = செவ்வாய்

இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = ராகு

ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = குரு

ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி = சனி

வெளிச்சம் பரவுகிறது - இதுஞானம் = கேது

திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = சுக்கிரன் (ஆசை); அதாவது ஆசையை குறைத்துக் கொண்டால் சுகம் என அர்த்தம்

ஆசைகள் நம்மை அழிக்கிறது ; மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது...

இதுவே அகல் விளக்கு ஏற்றுவத்தின் நவகிரஹ தத்துவம்.
 



Leave a Comment