திருப்பதியில் 13 மணி நேரம் தரிசனம் ரத்து....


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூர்ய கிரகணத்தையொட்டி டிசம்பர் 25, 26 ம் தேதிகளில் 13 மணி நேரம் கோவில் நடை அடைக்கப்படுகிறது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் டிசம்பர் 26 ம் தேதி காலை அதிகாலை 8.08 மணி முதல் 11.16  மணி வரை சூர்ய கிரகணம் ஏற்படவுள்ளது. கோயில் சம்பர்தாயபாடி சூர்ய கிரகணம், சந்திர கிரகணத்தின் 6 முன்னதாக கோயில் கதவுகள் மூடப்படுவது வழக்கம் . 

அதன்படி டிசம்பர்  25 ஆம் தேதி இரவு 11 மணிக்கு கோயில் கதவுகள் மூடப்படுகிறது. 26 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 12 மணிக்கு கோயில் கதவுகள் திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாதம், தோமாலை சேவை,  பஞ்சாங்கம் படித்து, அர்ச்சனை போன்ற சேவைகள் ஏகாந்தமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் அர்ச்சகர்கள் மட்டும்  நடத்த உள்ளனர். இதைத் தொடர்ந்து மதியம் 2 மணிக்கு பிறகு சர்வ தரிசனத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.



Leave a Comment