பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தீர்த்தவாரி....


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் . இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாள் திருவிழாவாக வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது.

பத்து நாள் திருவிழாவில் இறுதி நாளான இன்று கற்பக விநாயகர் வெள்ளிகேடகத்தில் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி பூஜைகள் நடைபெற்றது.

அங்கு  அங்குசதேவருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட அபிசேகங்கள் நடைபெற்றது. பின்னா பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. 



Leave a Comment