பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் பல்வேறு வாகனங்களில் உலா வந்த அற்புத படக்காட்சி....


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் சதுர்த்தி பெருவிழா பத்து நாட்கள் நடைபெற்று வருகிறது.

பிள்ளையார்பட்டியில் நிகழும் திருவிழாக்களில் ஆண்டு தோறும் ஆவணித்திங்களில் வரும் விநாயக சதுர்த்தியே பெருந்திருநாள் ஆகும்.

கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கிய விழாவில் இரண்டாம் திருநாளில் இருந்து எட்டாம் திருநாளில் வரை காலை விழாவில் விநாயகர் வெள்ளி கேடகத்தில் உலா வருவார். 

பல்வேறு வெள்ளி கேடகத்தில் விநாயக பெருமான் உலா வந்த படக்காட்சிகள்.....


 ஏழாம் திருநாள் - வெள்ளி மயில் வாகனம்.

10 நாட்கள் நடைபெறும் விழாவில் 9 வது நாள் தேரோட்டமும் 10வது நாளான விநாயகர் சதுர்த்தியன்று காலை தீர்த்தவாரியும் முக்குறுனி கொழுக்கட்டை படையலும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பிள்ளையார்பட்டி நகர டிரஸ்டிகள் கவனித்து வருகின்றனர். 



Leave a Comment