விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பொரித்த  மோதகம் ....


தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கிண்ணம்
மைதா மாவு - 1/2 கிண்ணம்
நாட்டுச்சர்க்கரை - 1 கிண்ணம்
தேங்காய் - 1 கிண்ணம் (துருவியது)
ஏலக்காய்ப் பொடி - 1 தேக்கரண்டி


நெய் - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)


செய்முறை:  

முதலில் கோதுமை மாவு மற்றும் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, வெதுவெதுப்பான நீர் மற்றும் நெய் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து. 15-20 நிமிடம் ஊற விடவும்.


பின்னர்,  வாணலியில் சிறிது நெய்விட்டு காய்ந்ததும்,  தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.  பின்பு ஒரு கிண்ணத்தில் நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய்  மற்றும் வதக்கி வைத்துள்ள தேங்காயைப் போட்டு, கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.  அடுத்த படியாகப் பிசைந்து வைத்துள்ள மாவைச் சிறு சிறு உருண்டைகளாக்கி, கையால் தட்டையாக தட்டி,  அதன் நடுவே தேங்காய் கலவையை சிறிது வைத்து  உருட்டி மேலே குமிழ்ப் போன்று வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.


பிறகு,  வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.  சுவையான பொரித்த  மோதகம் தயார்.
 



Leave a Comment