பிள்ளையார்பட்டியில் சூரசம்ஹாரம்.... அற்புதமான வீடியோ காட்சி....


பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்வை, ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் சதுர்த்தி பெருவிழா பத்து நாட்கள் நடைபெறுகிறது.

விழாவின் ஆறாம் திருநாளான நேற்று வெள்ளி யானை வாகனத்தில் திருக்கோவில் மணிமண்டபத்தில் விநாயகர் எழுந்தருளினார்.

இதன்பின், மேள வாத்தியங்கள் முழங்க திருக்கோவிலை சுற்றி வந்து கோவில் முன்பாக உள்ள குளத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் பிள்ளையார்.

இங்கு தேவர்களை கொடுமைப்படுத்திய கஜமுக அசுரனை போரில் எதிர்கொண்ட நிகழ்வு நடைபெற்றது. தனது தந்தத்தால் அசுரனை விநாயகர் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான சூரசம்ஹார நிகழ்வினை கண்டுகளித்து தரிசனம் செய்தனர்.
 



Leave a Comment