இன்றுடன் ஸ்ரீ அத்திவரதர் தரிசனம் நிறைவு... 


காஞ்சிபுரம், ஸ்ரீ அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.  காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1 முதல் 31 நாட்கள் சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1 முதல் 15 நாட்களாக நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

அத்திவரதரை தரிசிக்க இன்றுடன் கடைசி நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நள்ளிரவு முதலே பல கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் நின்று 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆடி மாத கருட சேவையை முன்னிட்டு நேற்று மாலை கருடசேவை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாலை 5 மணியிலிருந்து அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் இரவு 8 மணிக்குப் பிறகு தரிசனம் தொடங்கவுள்ளது.

நேற்று பகல் 12 மணியுடன் விஐபி மற்றும் விவிஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 47-வது நாளான  இன்று மாலை 5 மணியுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறுகிறது. 

ஆகஸ்ட் 17-ம் தேதி அத்திவரதரை திருக்கோயில் அனந்தசரஸ் திருக்குளத்தில் ஆகம விதிகளின்படி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அன்று மாலை குளத்தில் வைக்கப்படுவார். 
 



Leave a Comment