திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரலட்சுமி விரதம்


திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரலட்சுமி விரதம் வெகு விமர்சையாக நடைபெற்றது. வரலட்சுமி விரதத்தையொட்டி அதிகாலையில் சுப்ரபாதம், சகஸ்ரநாம அர்ச்சனை, நித்திய அர்ச்சனை மூலவருக்கும் உற்சவருக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து பத்மாவதி தாயார் உற்சவர் ஆஸ்தான மண்டபத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டது. 

பின்னர் தாயாருக்கு லட்சுமி சகஸ்கர நாம அர்ச்சனை, அஷ்டோத்திர நாமாவளி படிக்கப்பட்டு ரோஜா, சாமந்தி ,மல்லி, சம்பங்கி, துளசி, மருவும், தாமரை உள்ளிட்ட மலர்களால் புஷ்ப அர்ச்சனை நடைபெற்றது. இதையடுத்து வரலட்சுமி விரததிற்காக சிறப்பாக செய்யப்பட்ட இட்லி, இனிப்பு இட்லி, லட்டு, வடை, அப்பம் போலி போன்ற 12 விதமான நெய்வேத்தியம் சுவாமிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதை அடுத்து மகா மங்கள ஆரத்தி நடைபெற்றது.

சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு 50000 கங்கன கயிறுகள்,  மஞ்சள் கயிறு , மஞ்சள் , குங்குமம்,  2 லட்சம் வளையல்கள் வழங்கப்பட்டது. மேலும் மூலவருக்கு தங்க புடவையால்  அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

வரலட்சுமி விரதத்தை ஒட்டி 1.5 டன்   மலர்களால் 85 தோட்டத்துறை ஊழியர்கள் ஆப்பிள், திராட்சை, மாதுளம் , சாத்துக்கொடி,  அன்னாசி பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்களாலும், மலர்களாலும் ஆஸ்தான  மண்டபத்தை அலங்கரித்தனர். மாலை 6 மணிக்கு தங்க ரதத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரலட்சுமி விரதத்தை ஒட்டி அபிஷேகத்திற்கு பின்னர் தரிசனம், லக்ஷ்மி பூஜை, கல்யாண உற்சவம்,  ரத்து செய்யப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் இணை செயல் அலுவலர் பசந்த்குமார், முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத், கூடுதல் முதன்மை பாதுகாப்பில் உள்ள சிவக்குமார் ரெட்டி, துணை செயலாளர் ஜான்சிராணி, விஜிலன்ஸ் அதிகாரி அசோக்குமார் மற்றும் ஆலய அர்ச்சகர்கள் அதிகாரிகள் பக்தர்கள் பங்கேற்றனர். 



Leave a Comment