வெள்ளை மற்றும் நீல நிற பட்டாடையில் அத்திவரதர் காட்சி


காஞ்சி அத்தி வரதர் 37 வது நாளில் வெள்ளை மற்றும் நீல நிற பட்டாடையில் காட்சியளிக்கிறார்.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவ திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிற பட்டாடையில் காட்சியளிக்கும் அத்தி வரதர் இன்று 37 வது வெள்ளை மற்றும் நீல நிறப்பட்டாடையில் காட்சியளித்து வருகின்றார்.

36 நாட்களில் 55 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர் நேற்றைய தினத்தை விட இன்று பக்தர்கள் கூட்டம் குறைவு

நேற்று 6 மணி அல்லது 8 மணி நேரம் காத்திருந்து தரிசிக்க வேண்டிய நிலையில் இன்று இலவச தரிசனத்தில் 3 மணி நேரத்தில் அத்தி வரதரை தரிசித்து வருகின்றனர்
 



Leave a Comment