காஞ்சி அத்தி வரதர் வி.ஐ.பி. தரிசனத்திற்கு புதிய கட்டுப்பாடு....


40 ஆண்டுகளுக்கு பிறகு காட்சி தரும் காஞ்சி அத்தி வரதரை தரிசிக்க நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பொது தரிசனத்திற்கு சுமார் 6 மணி நேரம் வரை ஆகிறது. 

இந்த நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவக்டிககைகளை எடுத்து வருகிறது. 

இதன்படி விஐபி தரிசனம் நன்கொடை பாஸ் வைத்திருப்பவர்கள் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 மணிக்கு மேல் வந்தால் நன்கொடை பாஸ் வைத்திருப்பவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

ஆன்லைன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அத்தி வரதரை தரிசிக்க அனுமதிக்கபடுவார்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். 



Leave a Comment