திருத்தணியில் ஆடி கிருத்திகை பரணி விழா....


திருத்தணியில் ஆடி கிருத்திகை முதல் நாளான இன்று பரணி விழா தொடங்கியது .  ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கம்,  மருத்துவ வசதி  தீயணைப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது  1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா தொடங்கியது விழாவின் முதல்நாளான இன்று பரணி நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. திருத்தணிக்கு காஞ்சிபுரம் வேலூர் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

அதேபோல் சென்னையில் இருந்து திருத்தணிக்கு  வருவதற்கு 3 சிறப்பு ரயில்களும், தரிசனம் முடிந்து செல்ல மூன்று சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது. பரணி விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பன்னீர் காவடி புஷ்ப காவடி  எடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.  

பக்தர்களின் வசதிக்காக மருத்துவ வசதிகளும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார் . அதேபோல் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்து 1500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



Leave a Comment