தஞ்சை பெரிய கோயில் சிவன் - பார்வதி  திருக்கல்யாணம் 


உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில், பெருவுடையாருக்கும் _ பெரியநாயகி அம்மனுக்கும்  திருக்கல்யாணம்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவன் - பார்வதி  திருக்கல்யாணத்தை பார்த்து பரவசம் அடைந்தனர். 

நாட்டிலேயே மாபெரும் கற்கோயிலாகத் திகழும்,   ஆயிரம் ஆண்டு கால பழமை வாய்ந்த தஞ்சாவூர் பெரிய கோயிலில், நேற்று இரவு பெருவுடையாருக்கும் - பெரியநாயகி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது

திருமண தோஷமுடையவர்கள் தோஷங்கள் நீங்கி,  விரைவில் திருமணம் நடைபெறவும்,  குழந்தை இல்லாதவர்களுக்கு  குழந்தை பாக்கியம் உன்டாகவும்  சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பக்தர்கள் பழங்கள், குங்குமம் ,மஞ்சள் கிழங்கு, திருமங்கல்ய சரடு,  வெற்றிலை, சீவல் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கி திருக்கல்யாண வைபோகத்தில் ஆயிரக்கணக்காள பக்தர்கள் பங்கேற்றனர். 



Leave a Comment