அருள்மிகு கற்பக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்.....


அரக்கோணத்தில் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமற்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு விநாயகர் அருளை பெற்றனர். 

வேலூர் மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு கற்பக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 9 ம் தேதி ஸ்ரீ விக்னேசுவரா பூஜை, ஸ்ரீ மகா கணபதி ஹோமம், ஸ்ரீ மகா லட்சுமி ஹோமம் போன்ற பல்வேறு பூஜைகளுடன் துவங்கியது. 

நாள் தோரும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை 4ம் கால யாகசாலை பூஜைகளுடன் துவங்கி வேத பண்டிதர்கள் மந்திரங்களை முழுங்க கோபுரத்தில் புனித நீர் ஊற்றி அருள்மிகு கற்பக விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது. 

பின்னர் ஆலயத்தில் பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு விநாயகரை வழிப்பட்டனர். 
 



Leave a Comment