கடன் தொல்லையை போக்கும் லட்சுமி நரசிம்மர் விரதம்


விழுப்புரம் பூவரசன்குப்பம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை வழிபட்டு விரதம் மேற்கொண்டால்கடன் தொல்லை நீங்கும்.

விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் ஊரில் உள்ளது அருள்மிகு லட்சுமி நரசிம்மர் சுவாமி ஆலயம். இந்த கோவிலில் மூலவராக லட்சுமி நரசிம்மரும், உற்சவராக பிரகலாத வரதனும் உள்ளனர். தாயாராக அமிர்தவல்லி இருந்து அருள்பாலிக்கிறார். பொதுவாக லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில், தாயார் மட்டுமே நரசிம்மரை ஆலிங்கனம் செய்யும் நிலையில் காட்சி இருக்கும். ஆனால், இந்த ஒரு கோவிலில் மட்டம் தான், நரசிம்மர் தாயாரை ஆலிங்கனம் செய்தபடி காட்சியளிக்கின்றனர். 

கடன் தொல்லை உள்ளவர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து இங்கு பூவரசன்குப்பம் கோவிலுக்கு வந்து தரிசித்தால் விரைவில் கடன் தொல்லை நீங்கி செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இதே போல், வேலைவாய்ப்பு இல்லாதவர்கள், வேலை இருந்தும் பதவி உயர்வு கிடைக்காதவர்கள் லக்ஷ்மி நரசிம்மரை வழிபட்டால் பதவி உயர்வு உடனடியாக கிடைக்கும். 

இந்த கோவிலில் தாயாருக்கும் ஆண்டாளுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளது. அமிர்தத்துக்கு இணையாக இங்குள்ள தாயார் உள்ளதால், இவர் அமிர்தவல்லி என்று அழைக்கப்படுகிறார்.
 



Leave a Comment