காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கருட சேவை உற்சவம்.


101 பஜனை கோஷ்டிகள் பாடி வர பல லட்சக்கணக்கான பக்தர்கள் காண  காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள்  தங்க கருட வாகனத்தில் வீதியுலா.

வைணவ 108 திவ்ய தேசங்களில் ஒன்றான உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ தேவராஜ சுவாமி என அழைக்கப்படும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரமோற்சவத்தின் 3-ஆம் நாள்  முக்கிய உற்சவமான கருட சேவை  உற்சவம்   நடைபெற்றது.

கருட சேவை உற்சவத்தை யொட்டி விடியற்காலை முதலே  கோவில் வளாகத்தில்  குவிந்த பக்தர்கள்  காணும் வகையில் வரதராஜபெருமாளுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தங்க கருடவாகனத்தில் எழுந்தருளி கோபுர வாசலில் வந்து நின்று   பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு வழி நெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து கோவிந்தா,கோவிந்தா என கோஷமிட்டு பக்தியுடன் வணங்கினர்.

இதனை தொடர்ந்து உள்ளூர்,வெளியூர்களிலிருந்து  வருகை தந்த  101 பஜனை கோஷ்டிகள் பாடிவர கருட வாகனத்தின் முன்னும் பின்னும் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க காஞ்சிபுரம் நகரின்  முக்கிய வீதிகளில் வலம் வந்து பல லட்ச கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கருடசேவையை காண வந்த மக்களுககு பக்தர்கள் வழி நெடுகிலும் அன்னதானம் வழங்கினார்கள்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோவில் கருட சேவை உற்சவத்தை காண தமிழகம் மட்டும் இல்லாமல் பல வெளி மாநிலங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கானோர்  வந்து  சுவாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment