தங்க ரதத்தில் திருச்சானூர் பத்மாவதி தாயார் வீதி உலா


திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வசந்த உற்சவத்தின்  இரண்டாவது நாளையொட்டி தங்க ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர வசந்த உற்சவதின் இரண்டாவது நாளான இன்று தங்க ரதத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி  நான்கு மாடவீதிகளில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க சுவாமி வீதி உலா வந்து அருள் பாலித்தார். 

கோடை காலத்தில் ஏற்படக்கூடிய வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வசந்த உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது .அவ்வாறு இன்று மதியம் பத்மாவதி தாயார் உற்சவருக்கு பால், மஞ்சள்,  குங்குமம், பால் ,தயிர், தேன், சந்தனம், இளநீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது . 

மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை அன்னமாச்சாரியார் திட்டத்தின் சார்பில் ஆன்மிக சங்கீர்த்தனைகள் நடைபெற்றது. இரவு ஏழு முப்பது மணிக்கு பத்மாவதி தாயார் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 



Leave a Comment