பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 


பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில்  விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிபட பூஜையுடன் தொடங்கியது. இதனையடுத்து கொடுமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

10 நாட்கள் நடைபெறும் வைகாசிவிசாகத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான   அருள்மிகு முத்துக்குமாராசாமி-வள்ளி,தெயாவானை திருக்கல்யாணம் 17 ம் தேதியும்,  தொடர்ந்து வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது.  

18ம்தேதி வைகாசி விசாக தினத்தன்று  மாலை 4.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில்  இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
 



Leave a Comment