சபரிமலையில் மே  14 நடைதிறப்பு


சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வைகாசி மாத பூஜைக்காக, வரும் 14-ந் தேதி திறக்கப்படுகிறது. 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்படும். மாதத்தின் முதல்  5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி வைகாசி மாத பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவிலில் 14-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 

கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டுவார். நடை திறக்கப்படும் மே 14 ஆம் தேதி மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

15-ந் தேதி அதிகாலை நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை உள்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும். 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் 19-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

 பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு ஜூன் 11-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 12-ந் தேதி பிரதிஷ்டை சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். மீண்டும் ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஜூன் மாதம் 15-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 20-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.



Leave a Comment