திருப்பதி ஏழுமலையானுக்கு கிடைக்கும் ஆண்டு வட்டி....


திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு வங்கிகளில் இருப்பு தொகையை டெபாசிட் செய்துள்ளது. இதன் மதிப்பு தற்போது 12,000 கோடி ரூபாயை தாண்டிவிட்டது.   இது குறித்து தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறுகையில், தேசிய மையமாக்கப்பட்ட சில வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் சிலவற்றிலும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் டெபாசிட் செய்யப்பட்ட இருப்பு தொகை 12,000 கோடியை தாண்டியுள்ளது. 

இதிலிருந்து சுமார் 845 கோடி ரூபாய் வட்டி ஆண்டுக்கு கிடைத்து வருகிறது. ஆண்டு வருமானம் 31 பில்லியன் இதோடு கோவிலின் ஆண்டு வருமானம் சுமார் 31 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் இது வரை 2.5 கோடி பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தந்துள்ளனர். இதில் பக்தர்கள் உண்டியலில் கணிக்கையாக வழங்கிய வகையில் 8.7 டன் தங்கம், கற்கள் பதிக்கப்பட்ட 550 கிலோ தங்க ஆபரணங்களையும் அளித்துள்ளனர். காணிக்கையாக கிடைத்த 8.7 டன் தங்கம் இவ்வாறு காணிக்கையாக கிடைத்த 8.7 டன் தங்கத்தில் 5387 கிலோ தங்கத்தை பாரத ஸ்டேட் வங்கியிலும், 1938 கிலோ தங்கத்தை இந்தியன் ஒவர்சீஸ் வங்கியிலும் வைக்கப்பட்டுள்ளன. 

பழங்கால சிலைகளும் & மதிப்புமிக்க ஆபரணமும் உண்டு மிக முக்கிய தளமான மலை கோவிலான வெங்கடேஸ்வர கோவிலினுள் பழங்கால மதிப்புமிக்க விலையுயர்ந்த சிலைகளும், மிக அதிக மதிப்புள்ள பழங்கால ஆபரணங்களும் உள்ளன. 



Leave a Comment