காஞ்சியில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தரும் அத்தி வரதர்


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 40  ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் ஆதி அத்தி வரதர் .

வரதராஜ பெருமாள் கோவிலில் முன்பு மூலவராக இருந்த ஆதி அத்தி வரதர் சிலை. இப்பொழுது அனந்த சரஸ் குளத்தில் நீருக்கு அடியில் இருக்கிறார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர் வெளியே இருந்து மொத்தம் 48 நாட்கள் தரிசனம் தருவார். 48 நாட்கள் வெளியில் இருக்கும் அத்தி வரதர் முதல், 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த, 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அருள்பாலிப்பார். இதற்கு முன்

அத்தி வரதர் 1979ம் ஆண்டு  ஜூலை, 2ல் எழுந்தருளினார். அப்பொழுதே பல லட்சம் மக்கள் தரிசனம் செய்துள்ளார். தகவல் தொடர்பு அதிகளவில் இல்லாத அக்காலத்திலேயே பல லட்சம் மக்கள் கலந்து கொண்டுள்ளதால். இப்பொழுது  அதைவிட பலமடங்கு பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 



Leave a Comment