ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா 25-ந்தேதி தொடங்குகிறது


பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா வருகிற 25 ஆம் தேதி தொடங்குகிறது. மே 5 ஆம் தேதி வரை நடைபெற இந்த விழாவுக்கு நாளை மறுநாள் காலை கொடி ஏற்றப்படுகிறது.

28-ந்தேதி மாலை 6 மணிக்கு கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா வருகிறார். மே 2-ந்தேதி காலை 7 மணிக்கு வண்டுலூர் சப்பரத்திலும், மாலை 6.30 மணிக்கு மேல் தங்க குதிரை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். மே 3-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 5-ந்தேதி இரவு 8 மணிக்கு ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் வீதி உலா வருகிறார்.

முன்னதாக சித்திரை திருநாளை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு ஆண்டு தோறும் வஸ்திர மரியாதை செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வஸ்திர மரியாதை செய்யும் நிகழ்ச்சி மே  2-ந்தேதி நடைபெற உள்ளது.
 



Leave a Comment