தீபாவளிக்கு எண்ணெய் குளியல் ஏன்?


தீபாவளி தினத்தில், எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்தால் புண்ணியம் உண்டாகும் என்பது ஐதீகம். அன்றைய தினத்தில், எண்ணெயில் திருமகளும், வெந்நீரில் கங்கையும் ஒன்று சேர்வதால், எண்ணெய் குளியல் செய்பவர்க்கு கங்கை யில் மூழ்கிக் குளித்த புனிதப்பயன் கிட்டும்.

கங்கா ஸ்நான தத்துவம்...
தீபாவளியன்று புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் கங்கா ஸ்நானம். எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு கங்கா ஸ்நானம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து தலைமுழுகினால், நம் பாவம் எல்லாம் போய்விடும் என்பது நம்பிக்கை.

கிருஷ்ணன், நரகாசுரனை அழித்த நாளே தீபாவளி. அன்று, சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை அனைத்துக்கும், கங்கையின் புனிதத்தை வழங்குகிறார் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தின் படி, அன்று நம் வீட்டில் உள்ள கிணறு, குழாய் ஆகியவற்றில் வரும் தண்ணீர் அனைத்தும், கங்கை நீராகவே பாவிக்கப்படும். இதனால் தான், தீபாவளி அன்று காலையில் நீராடுவதை கங்காஸ்நானம் ஆச்சா என்று சொல்கிறார்கள்.

அதிர்ஷ்டம் தரும் உப்பு
தீபாவளியன்று பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு தெய்வத்தின் கடாட்சம் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. எண்ணெய் லட்சுமி; சீயக்காய் சரஸ்வதி; சந் தனம் பூமாதேவி; குங்குமம் கவுரி; தண்ணீர் கங்கை, இனிப்பு பலகாரம் அமிர்தம்; நெருப்பு பொறி ஜீவாத்மா; புத்தாடை மகாவிஷ்ணு; லேகியம் தன்வந்தரி. தீபாவளியன்று உப்பு வாங்குவது அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. உப்பில் மகாலட்சுமி வாசம் செய் கிறார் என்பது ஐதீகம்.



Leave a Comment