ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதாம்பிகைக்கு பௌர்ணமி சிறப்பு மஹா அபிஷேகம்...


புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் எழுந்தருளியுள்ள ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதாம்பிகை,ஸ்ரீ யோக மாயா லலிதாம்பிகை ஆலயத்தில் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு மஹா அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது.

புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் அமைந்துள்ளது ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதாம்பிகை மற்றும் ஶ்ரீ யோக மாயா லலிதாம்பிகை திருக்கோவில். இந்த திருக்கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ லலிதா மஹாயாகம் நடைபெற்று, ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதா மற்றும் ஶ்ரீ யோக மாயா லலிதாம்பிகைக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு பதினாறு வகையான சோடச தீபாராதனைகள் காட்டப்பட்டது.

தொடர்ந்து ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதா மற்றும் ஶ்ரீ யோக மாயா  லலிதாம்பிகைக்கு சகஸ்ரநாமம் பாடப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு லலிதாம்பிகை அம்மனை வழிபட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் குருக்கள் மஹேஸ்வர சாஸ்திரி மற்றும் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

4



Leave a Comment