திருவண்ணாமலை நவராத்திரி...லிங்க பூஜை அலங்காரத்தில் ஸ்ரீ பச்சையம்மன் மன்னார்சாமி


அருள்மிகு ஸ்ரீ  பச்சையம்மன் மன்னார்சாமி திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா வெகு விமர்சையாகநடைபெற்றது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சையம்மன் மன்னார்சாமி திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா ஏழாம் நாள் இன்று லிங்க பூஜை அலங்காரத்தில் ஸ்ரீ பச்சையம்மன் மன்னார்சாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

முன்னதாக அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் மன்னார்சாமிக்கு சிவாச்சாரியர்கள் பச்சரிசி மாவு, சீயக்காய் தூள், மஞ்சள் தூள், பால், பழம், தேன், தயிர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் மலர் மாலை அலங்காரத்துடன் மகா தீபாரதனை நடைபெற்றது.

ஸ்ரீ பச்சையம்மன் மன்னர் சாமி திருக்கோவிலில் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டனர்.



Leave a Comment