நவராத்திரி ஸ்பெஷல்... 5 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம்...


நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம்!

வேலூர் சத்துவாச்சாரி பிராமணர் வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பர்வத வர்தினி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில், நவராத்திரி பெருவிழாவின் ஆறாம் நாளான இன்று உற்சவருக்கு,ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 500, 200, 100, 50 ஆகிய ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம் பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தது.

சிவ வாத்தியங்கள் முழங்க உற்சவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தனலட்சுமி உற்சவரை வணங்கி சென்றனர்.



Leave a Comment